சென்னை, செப் 25 - நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் மார்வாடி தோட்டம் மக்களை அச்சுறுத்தக் கூடாது என்று சிபிஎம் வலியுறுத்தி உள்ளது. தி.நகர் பகுதி, 133வது வட்டத்தில் மார்வாடி தோட்டம் உள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு களை ஆக்கிரமிக்க சமூக விரோதி கள் அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கமும் பல கட்ட போராட்டங் களை நடத்தி மக்களை பாதுகாத்து வருகிறது. 1994ஆம்ஆண்டு மார்வாடி தோட்டத்தில் மக்கள் நீண்ட கால மாக வாழ்வதை உறுதி செய்து, பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. 2004ம்ஆண்டு ஜெயந்தி லால் என்பவர் இடத்திற்கு உரிமை கோரி பணம்கொடுக்க வந்ததை மக்கள் நிராகரித்தனர்.இந்த நிலையில் 2023ல் ஜெயந்திலால் நீதி மன்றத்திற்கு தவறான தகவல்களை தந்து, தனது காலிமனையை அளந்து தர வட்டாட்சியருக்கு உத்தரவிடக் கோரி தீர்ப்பை பெற்றார். அதன்படி இடத்தை அளவீடு செய்ய வந்த வட்டாட்சியர், ஜெயந்திலால் குறிப்பிடும் இடம் காலி மனை அல்ல. மக்கள் வாழும் இடம் என்று வட்டாட்சியர் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மார்வாடித் தோட்டம் குடியிருப்போர் நலச் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கிண்டி வட்டாட்சியர், காவல்துறையினர் புதனன்று (செப்.25) மார்வாடி தோட்டம் பகு தியை அளவீடு செய்ய வந்தனர். அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் தடுத்து திருப்பி அனுப்பினர். இதுகுறித்து கட்சியின் தி.நகர் பகுதி குழு உறுப்பினர் எம்.குமார் குறிப்பிடுகையில், நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வரு வாய்த் துறையும், காவல்துறையும் எந்தவித அச்சுறுத்தல் நடவடிக்கை யிலும் ஈடுபடக் கூடாது. தமிழக அரசு குடியிருக்கும் மக்களுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.