tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை புலன் விசாரணை செய்யக் கோரி சனிக்கிழமையன்று (ஜூன் 22) தாம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி எம்.சி., எம்.தாமு,  ஏ.முருகானந்தம், ஹெலன் தேவ கிருபை, தீ.சந்துரு, பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் (பல்லாவரம்) உள்ளிட்டோர் பேசினர்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தண்டையார்பேட்டையில் 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எஸ்.பாக்கியம், ஆர்.லோகநாதன், எஸ்.பாக்கியம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன், பாப்பு ஆகியோர் பேசினர்.

பெரம்பூர் மாதவரம் செங்குன்றம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன் தலைமையில் மூலக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.ஆனந்தன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கோடீஸ்வரி, வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் அபிராமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் நிதீஷ் ஆகியோர் பேசினர்.

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், தமிழக அரசுக்கு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வலியுறுத்தியும்  சிபிஎம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம்  முன்பு மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், ஒன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாசரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எம்.மருதவாணன், வி.உதயகுமார், பி.கருப்பையன், வி.சுப்பராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திருவரசு, ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பேசினர்.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்து. மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்திக் கொள்ள அனுமதிக்க கோரி சனிக்கிழமையன்று (ஜூன் 22) சென்மேரீஸ் பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், எஸ்.மகேஷ், விஜயா, கிளைச் செயலாளர்கள் கே.மாரிமுத்து, நித்தியானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.

வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில்   காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தாலுக்கா செயலாளர் ஆர்.சுடரொளியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி துவக்க உரையாற்றினார். வேலூர் பிலிப் (விசிக), சிவக்குமார்(திக), சிவா (திவிக), ஜி.கோபி (மதிமுக), சிபிஐ(எம்எல்) ஏழுமலை கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி நிறைவு செய்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், கே.சாமிநாதன், செ.ஏகலைவன், கே.ஜெ.சீனிவாசன் மற்றும் மாவட்ட, வட்டக்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன்,  சி.பெருமாள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்,தற்போது நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓசூரில் மாநகர குழு செயலாளர் சி.பி.ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ராஜாரெட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி,மாவட்ட குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர்,நாராயண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டக் குழு சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமையன்று (ஜூன். 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, டி. சந்திரன், ஆர். மணிகண்டன், எல்.சி. மணி, எஸ். கிட்டு, ஆ. தவராஜ், எபிஎம். சீனிவாசன், எஸ். செல்வம், மா. கோவலன், ஆர். வெங்கடேசன், சேகர், தா. வெங்கடேசன், என். ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், நீட் வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  திருமுல்லைவாயில் மாவட்டக்குழு உறுப்பினர் அ.ஜான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மா.பூபாலன், எல்.பி.சரவணதமிழன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சுந்தரராஜ், ஆர்.கோபி ஆகியோர் பேசினர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு கண்டன உரையாற்றினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி,வட்டக் குழு செயலாளர்கள் கிருஷ்ணகிரி பெரியசாமி,ஊத்தங்கரை மகாலிங்கம்,பர்கூர் சீனிவாசன்,சிங்காரப்பேட்டை சபாபதி,மாவட்டக் குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, இளவரசன்,லெனின் முருகன்,சக்தி கலந்து கொண்டனர்.