ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலிடம் சிபிஎம் மனு
திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலிடம் சிபிஎம் மனு
திருவள்ளூர், மே 13- திருவள்ளூர் மாவட்டத்தில், நீண்டகால மாக கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பால பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, திரு வள்ளூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் எஸ். சசிகாந்த் செந்திலை திங்களன்று (மே 12), அவரது அலுவலகத்தில் சந்தித்து சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பால பணிகள் நிறைவு பெறாததால், பொது மக்கள் 2 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமங்களை தவிர்க்க சுரங்கப்பாதையை சீரமைத்து பொதுமக்கள் சென்று வருவதற்கு ஏற்ற வாறு அமைக்க வேண்டும். திருநின்றவூர் ஏஞ்சல் பள்ளி அருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை மிகவும் குறுகலாக ஒரு வழி பாதையாகவே உள்ளது. மருத்துவமனை போன்ற அவசரத்திற்கு கூட செல்லமுடியாத சூழ்நிலை உள்ளது. இந்த சுரங்கப் பாதையை விரிவுபடுத்தி மின்விளக்குகள் பொருத்தி யும் மேம்படுத்த வேண்டும் என சிபிஎம் பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஏ.பச்சை யம்மாள் ஏற்கெனவே மனு அளித்துள்ளார். நெமிலிச்சேரி ரயில்வே சுரங்கப்பாதை முழுமை பெறாமல் உள்ளது. மழை காலத்தில் மழைநீர் சுரங்க பாதைக்குள் தேங்கு வதால், சுரங்க பாதையை கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. சுரங்கப் பாதையை சீரமைத்து அனைத்து வசதிகளையும் கொண்ட ரயில் நிலையமாக மேம்படுத்த வேண்டும்.
புதிய ரயில் பாதை
ஊத்துக்கோட்டை வட்டத்தில் இதுவரை ரயில்வே வழித்தடம் இல்லை. ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் ஆட்சி யின் போது அத்திப்பட்டு முதல் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம், புத்தூர் வரை புதிய ரயில்வே வழித்தடம் அமைக்க திட்டம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணிகள் வேகம் பெறவில்லை. இந்த திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். மேலும், மெய்யூர் கிராமத்தில் வெம்பேடு ஊராட்சி, குருபுறம் பகுதி யில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பல போராட்டங்களை நடத்தி னர். அதன்பிறகு, பழங்குடி இன குடும்பங்கள் புதியதாக குடியமர்வு செய்து வசித்து வருகின்றனர். அம்மக்களுக்கு மின் இணைப்பு, தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும். மெய்யூர் ஊராட்சியில் கடந்த 2000- ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூ கங்களை சேர்ந்த 300க் கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்கியது. ஆனால் 25 ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்களுக்கு நிலத்தை அளவீடு செய்து பயனாளிகளிடம் நிலத்தை ஒப்படைக்கவில்லை. கடந்த இரண்டு மாதத் திற்கு முன்னால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலை யீடு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க உத்தரவிட்டார். ஒரு சிலருக்கு மட்டும் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பணி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். திருவள்ளூர் வட்டம், பேரத்தூர் ஊராட்சியில் பேரத்தூர் பட்டியலின மக்கள் 150 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக கிராம நத்தத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். 1992-ல் ஒரு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஒரு தனி நபர் பெயரில் பட்டா தாக்கல் ஆகியுள்ளதால், பெரும்பான்மை மக்க ளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தொகுப்பு வீடு உட்பட அரசின் எந்த நல திட்டப் பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேற்கண்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என சிபிஎம் சார்பில் நேரில் சென்று வலியுறுத்தியுள்ள னர். மனுவை பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சசிகாந்த் செந்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், மூத்த தோழர் கே.செல்வராஜ், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஏ.பச்சையம்மாள், வட்ட குழு உறுப்பினர்கள் சசிகலா, தேவா, ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.