சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் இல்ல திருமணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்.அருணாவின் மகள் ஆர்.சிந்தித்தியா மற்றும் பி.ஐ.முத்துலிங்கசாமி, எம்.ராஜகனி தம்பதியின் மகன் எம்.நவீன் இணையேற்பு விழா ஞாயிறன்று (ஜூலை 29) சென்னையில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத் என்.குணசேகரன், கே.பாலபாரதி, மூத்தத் தலைவர்கள் எஸ்.ஏ.பெருமாள், வே.மீனாட்சி சுந்தரம், ஏ.கே.பத்மநாபன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் வெங்கடேஷ்பாபு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.சச்சிதானந்தம், கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.