tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிரில் சிபிஎம் கிளை மாநாடுகள்

சென்னை, டிச. 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளின் ஒருபகுதியாக ‘தீக்கதிர்’ நாளிதழில் செயல்படும் கட்சி கிளைகளின் மாநாடுகள் நடைபெற்றன.

சென்னைப்பதிப்பு கிளைச் செயலாளராக ஜெ.நூர்தீன், மதுரைப் பதிப்பு ஆசிரியர்குழு கிளைச் செயலாளராக ஆர்.நித்யா, நிர்வாகப் பிரிவு கிளைச் செயலாளராக கே.பாண்டியராஜன், பிரீ பிரஸ் கிளைச் செயலாளராக ஏ.ஆறுமுகம், அச்சகப்பிரிவு கிளைச் செயலாளராக கே.பிரபாகரன், கோயம்புத்தூர் பதிப்பு ஆசிரியர் குழு கிளைச் செயலாளராக பி. ஜீவா, நிர்வாகப்பிரிவு கிளைச் செயலாளராக ஏ.நெல்சன்பாபு, திருச்சி பதிப்பு கிளைச் செயலாளராக ஸ்டாலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாடுகளில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், எம்.கண்ணன், ஐ.வி.நாகராஜன், எம்.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கட்சியின் தீக்கதிர் மதுரைப்பதிப்பு இடைக்குழு மாநாடு டிசம்பர் 12 அன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா: டெண்டர் கோரியது அரசு

சென்னை,டிச.5-  2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். இந்த இலக்கை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பிலான தங்க நகை தொழில் பூங்கா அமையவுள்ளது. 3.41 ஏக்கர் பரப்பளவில் தங்க நகை தொழில் பூங்காவுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு, குறு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கள ஆய்வுக்காக கோவையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பிலான தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் சாலை பணிகள் இன்றைக்குள் முடியும்  : அமைச்சர் எ.வ.வேலு தகவல்

விழுப்புரம்,டிச.5- விழுப்புரத்தில் சாலை  பணிகள் இன்றைக்குள் முடி யும்  என்று நெடுஞ்சாலை-பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரி வித்தார். விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 3 சாலைகளில் மட்டும் போக்குவரத்து தடை உள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் அது சரிசெய்யப்படும்.  பெஞ்சால் புயல் கனமழை வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் 317 கி.மீ தூர சாலைகளும், கடலூர் மாவட்டத்தில் 80 கி.மீ தூர  சாலைகளும் சேதமாகி யுள்ளன.  சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய திட்ட  மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொட ங்கும் என்று தெரிவித்தார்.

குலமங்கலம், திருமயத்தில்  யூகலிப்டஸ் மரங்கள் நடக்கூடாது 

புதுக்கோட்டை,டிச.5- குலமங்கலம், திரு மயத்தில் யூகலிப்டஸ் மரங் கள் நடக்கூடாது என்று  உயர்நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட் டம் குலமங்கலம், திருமயம் பகுதிகளில் யூக லிப்டஸ் மரங்கள் நட தடை விதிக்கக் கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

புதுக்கோட்டை ஆட்சி யர், வன அலுவலர் ஆகி யோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப் பித்துள்ளது. குலமங்கலம், திருமயம் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்கள் நடும் பணியை தொடரக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.