புதுச்சேரியில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மாஹேயில் உள்ள பள்ளூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி அபுதாபியிலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கோழிக்கோடு விமான நிலையம் வந்தார். அங்கிருந்து மாஹே வந்தார். இதையடுத்து அவருக்கு கடுமையான காய்ச்சல் சளி தலைவலி பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாஹே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.