tamilnadu

முன்னாள் அமைச்சருக்கு கொரோனா

சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அக்டோபர் 13 ஆம் தேதி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு அவரது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான தூத்துக் குடியைச் சேர்ந்த சி.த. செல்லப் பாண்டியனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.