சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை வியாழனன்று (ஜூலை 9) மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.