கொரோனா: பெண் பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் கடந்த 3ந் தேதி அனுமதிக்கப்பட்ட 49 வயது பெண் சிகிச்சை பலனின்றி வியாழனன்று (மே 7) உயிரிழந்தார்.
விழுப்புரம்: மேலும் 61 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையில் பணி யாற்றி சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களாவர். இதனையடுத்து அத்தொழிலாளர்கள் வசிக்கும் 12 கிரா மங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே 164 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் கொரோனா பாதிப்பு 324 ஆக உயர்ந்தது
கடலூர் மாவட்டத்தில் புதனன்று (மே 6) மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த மாவட்டத்தில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது.
புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா
சென்னை கோயம்பேட்டில் பணியாற்றி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருவர் சளி, இருமல் இருந்ததால் புதனன்று (மே 6) கதிர்காமம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். பரி சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர் அந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்ப்பட்டு வருகிறது.