tamilnadu

img

மனை பட்டா வழங்க கோரி தொடர் முழக்கப் போராட்டம்

மனை பட்டா வழங்க கோரி  தொடர் முழக்கப் போராட்டம்

உளுந்தூர்பேட்டையில் சிபிஎம் நடத்தியது

கள்ளக்குறிச்சி, மே 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு காட்டுச்செல்லூர் கிராமத்தில் மனை பட்டா வழங்க கோரி தொடர் முழக்கப் போராட்டம் கிளைச் செயலாளர் கே.குமார் தலைமையில் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை வட்டம், காட்டுச் செல்லூர் கிராமத்தில் சுமார் 20 ஆண்டு களுக்கும் மேலாக சுமார் 50 க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வரும் அப்பகுதி மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிபிஎம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. தற்போது உளுந்தூர்பேட்டை வட்டாட்சி யர் அலுவலகத்தில் வருவாய் தீர்வா யம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தீர்வாயத்தில் எங்கள் மனுக்களை பரிசீலனை செய்து உடனே மனை பட்டா வழங்க வேண்டும் என தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர்,மாவட்ட குழு ஏ.வி.ஸ்டாலின்மணி, ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.ஜெயமூர்த்தி, ஆர்.செல்வராஜ் கே அஞ்சலை. கே. செம்மலை,எஸ். மாறன், எம்.முகமதுரபிக், டி.ஐயப்பன், கிளைச் செயலாளர் எம்.சுப்பிரமணியன்,மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட னர்.