tamilnadu

விஐடி பல்கலைக்கழகத்தில் ‘ஸ்டார்’ திட்டத்திற்கான கலந்தாய்வு தொடக்கம்

சென்னை, ஜூலை 9- விஐடி போபால் பல்கலைக்கழகத்தில், ஊரகப்பகுதி மாணவர்கள் முன்னேற்றத்திற் கான ஆதரவு அளிக்கும் ‘ஸ்டார்’ திட்டத்தின் 24-25 கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வு திங்களன்று (ஜூலை 8) தொடங்கியது. விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் வருங்காலத்தை உறுதி செய்கிற பல்வேறு படிப்புகள் இந்த பெருமைமிகு திட்டத்தின் கீழ் சேர்ந்த அனைத்து புதிய மாண வர்களுக்கு சேர்க்கை கடிதங்கள் வழங்கப் பட்டன.

ஊரகப்பகுதி மாணவர்கள் முன்னேற்றத்திற்கான ஆதரவு என்னும் இந்த திட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் ஊரக பகுதிகளைச் சேர்ந்த, உயர் கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ளது. அடித்தட்டு மக்களின் உயர்வைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகத்தில் நிறுவனரும் வேந்த ராகிய டாக்டர் ஜி.விஸ்வநாதன்  2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அன்று முதல் மத்தியப் பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ், சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தங்கு மிடம் மற்றும் உணவு ஏற்பாட்டுடன் 100 விழுக்காடு கட்டணமில்லா கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், மத்திய பிரதேசத்தில் ஊரக பகுதிகளைச் சேர்ந்த பிள்ளைகள், மிகுந்த துன்பம் மிக்க சூழல்களில் வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  மாணவர்களுக்கு விஐடி போபால், கல்விக் கூடமாக மட்டுமல்ல, அதற்கு மேலான ஒன்றாகவே அவர்கள் மனங்களில் நிறைந்துள்ளது. ஸ்டார் திட்டத்தின் கீழ்  இதுவரை, ஊரக மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த 175 மாணவர்கள் (100 மாணவர்களும் 75 மாணவிகள்) பயனடைந்துள்ளனர் என்றார்.