சென்னை,நவ.22- போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
போதைப் பொருட்கள் நட மாட்டத்தை கட்டுப்படுத்துவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்தவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந் தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற் கொள்ளவும் தமிழ்நாடு முதல மைச்சர் ஸ்டாலின் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் நாடு முதலமைச்சர் தலைமை யில் நாட்டு நலப் பணி திட்ட மாண வர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மது விலக்கு அமலாக்கப் பிரிவு ஆகிய வற்றை இணைத்து புதிதாக உரு வாக்கப்பட்டுள்ள “அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வு துறை” என்ற புதிய பிரிவை தமிழ் நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.