tamilnadu

தாம்பரம் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை

தாம்பரம், மே- 13 தாம்பரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் உதயா (20).  பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ  முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிறன்று( மே 12) சிட்லப்பாக்கம் சேது நாராயணன் தெருவில் தனது தோழியு டன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் உதயா வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதயாவை வெட்டினர். ஆனால்  தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் இருந்த குடி யிருப்பு பகுதிக்கு உதயா ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு அங்கி ருந்து தப்பி ஓடினர். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயாவை மீட்டு  குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திங்களன்று காலை சிகிச்சை பலனின்றி உதயா உயிரிழந்தார்.

இதற்கிடையே சம்பவத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாண வர்கள் உள்பட 3 பேர் சேலையூர் உதவி ஆணையர் அலு வலகத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசார ணையில் மப்பேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை  பார்க்கும் நரேஷ் (24),மப்பேடு ,புத்தூர் விரிவு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் கிருஷ்ணா (19) என்ற கல்லூரி மாணவர் மற்றும் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் சாந்தகுமார் என்பதும் தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் உதயா மூன்று நாட்களுக்கு முன்பு வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தக ராறில் நரேசை தாக்கியதாகவும், இதற்கு பழி வாங்கு வதற்காக தனது நண்பர் கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணா  மற்றும் சாந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து உதயாவை நரேஷ் மற்றும் கிருஷ்ணா அரிவாளால் வெட்டுவதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;