tamilnadu

img

கோவை - சிபிஎம் பீளமேடு நகரக்குழுவின் சிறப்புப் பேரவைக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பீளமேடு நகரக்குழுவின் சிறப்புப் பேரவைக் கூட்டம் கோவை பீளமேடு கட்சி அலு வலகத்தில் நடைபெற்றது. இதில், நவ.29 ஆம் தேதி நடை பெறவுள்ள கே.தங்கவேல், கே.சி.கருணாகரன் படத்திறப்பு மற்றும் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு விழாவின் ஆயத்தக் கூட்டமாகவும், கட்சியின் எதிர்காலப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கட்சியின் நகரக்குழு உறுப்பினர் ஏ.மேகநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.மனோகரன், நகர செயலாளர் கே. பாண்டியன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;