ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றமாக சூழல் ஏற்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை அதிமுக அலுவலகம் சென்ற போது இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கட்டை, கம்புகளை வைத்தும், கற்களை வீசி எறிந்தும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பதற்றத்தை தணிக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுக்குழு நடத்த தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு வானரகத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்குள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது