மெட்ரோ ரயில் தூண் மீது மாநகரப் பேருந்து மோதியது
ஓட்டுநர் உள்பட 10 பேர் காயம்
பூந்தமல்லியில் வியாழக்கிழமை மாநகரப் பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதிய விபத்தில் ஓட்டு நர் உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணி கள் காயமடைந்தனர். சென்னை, அண்ணா சதுக்கத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகரப் பேருந்து (தடம் எண்.25 ஜி) பயணிகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் ஏழுமலை ஓட்டி வந்தார். நடத்துநராக சுரேஷ் என்ப வர் பணியாற்றினார். இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணி கள் பயணம் செய்தனர். இந்த பேருந்து பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநர் ஏழுமலையின் கட்டுப் பாட்டை இழந்த பேருந்து சாலை யின் நடுவே உள்ள மெட்ரோ ரயில் தூண் (பில்லர்) மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் ஏழுமலை உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இதைப் பார்த்த போக்குவரத்து போலீஸார் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்த ஊழியர் கள் ஊர்திகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காய மடைந்தவர்களை மீட்டு, பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சைக்கு பிறகு, காயமடைந்த பயணிகள் வீடு திரும்பினர். விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஆவடி போக்குவரத்து புலனாய்வு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான மாநகரப் பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.