tamilnadu

img

1,000 புதிய வகுப்பறை கட்டிடங்கள்

சென்னை, டிச.26 - ரூ.155.42 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 1000  வகுப்பறை கட்டிடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சட்டப்பேரவை அறிவிப்புக்கிணங்க, இரண்டாம் கட்டமாக 34 மாவட்டங்களில் ரூ. 155.42 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயி லாக திறந்து வைத்தார்.

50 கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள்

கிராம ஊராட்சி அலுவல கம் மற்றும் கிராம நிர்வாக  அலுவலகம் ஒரே கிராமத்தில் அமையப் பெற்று இருப்பின், அவற்றை முதன்மைப்படுத்தி சுமார்  600 கிராம செயலக கட்டிடங் கள் கட்ட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 21 மாவட்டங் களில் ரூ. 20.54 கோடியில் கட்டப்பட்டுள்ள 50 கிராமச் செயலகங்களையும் முதல் வர் திறந்து வைத்தார்.

மேலும், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தேசிய கிராம சுயாட்சி திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் ரூ. 24 கோடியே 39 லட்சம் செல வில் அனைத்து மாவட்டங் களிலும் கட்டப்பட்டுள்ள 102  கிராம ஊராட்சி மன்றக் கட்டிடங்களையும் காணொ லிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழு தடைந்த நிலையில் இருந்த ஊராட்சி ஒன்றியக் கட்டிடங்களுக்கு பதில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர், மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஆகிய இடங்களில் ஒருங் கிணைந்த ஒப்படைக்கப் பட்ட வருவாய் கூறு நிதியி லிருந்து ரூ. 15.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 புதிய ஊராட்சி ஒன்றிய  அலுவலக கட்டிடங்களை யும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மோட்டார் வாகனங்கள்
போக்குவரத்து துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்கு வரத்து, மோட்டார் வாகன  ஆய்வாளர் அலுவலகங் கள், 54 மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான மற்றும் அலுவலக ஓட்டு னருக்கு தேர்வு நடத்தும் பொருட்டு ரூ.6.25 கோடியில் 145 இலகுரக மோட்டார் கார் வாகனங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.