சென்னை, டிச.27 - சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளின் படி தமிழ்நாட்டை உருவாக்க முயற்சிப்போம் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் புதனன்று (டிச.27) நடைபெற்ற விழா வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் ரூ.171 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் ரூ.184 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை பயனாளி களுக்கு வழங்கியும் அவர் பேசியதாவது :-
சமூக நீதி பாதையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக நீதி, சமத்து வம், சமதர்மம் ஆகிய மானிட நெறிகளை தமிழ் நாட்டில் நிலைநாட்ட உழைத்து வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங் கள் தீட்டப்பட்டு வரு கின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர்களுக்கு விருதும் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் சமூக, கல்வி, பொருளாதார நிலையை உயர்த்த பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகி றோம். மக்கள் மனதில் இருந்து சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் ஏற்பட்டாலே மாற்றம் சாத்தி யமாகும்; இது எளிதல்ல அதற்கான விழிப்புணர்வு பயணம் மேற்கொள் கிறோம்.
அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம். அம்பேத்கர் விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர், பழங்குடியி னர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளது. தாட்கோ மூலம் 10,000 பேருக்கு ரூ.152 கோடி மானியம் வழங்கப்பட் டுள்ளது.
முதலீட்டு மானியம் வழங்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி மதிப்பில் 12 விடுதிகள் கட்டப்பட் டுள்ளன. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகி றோம். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆக்கப்பூர்வ மான திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.