tamilnadu

img

சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் - நீதிக்கான கூட்டணி வெற்றி!

25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் நீதிக்கான கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர். 
கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், 1999ஆம் ஆண்டுக்கு பிறகு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக, தேர்தல் நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் கண்காணிப்பில் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி அன்று, சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடைபெற்றது.
இதில் நீதிக்கான கூட்டணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் (தினகரன்) 659 வாக்குகள் பெற்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மு.அசீப் (அரண் செய்) அசீப் 734 வாக்குகள் பெற்றும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட மணிகண்டன் (ஜெயா டிவி) 803 வாக்குகள் பெற்றும், துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட மதன் (நியூஸ் 18 தமிழ்நாடு) மதன் 599 வாக்குகள் மற்றும் சுந்தரபாரதி (புதிய தலைமுறை)  516 வாக்குகள் பெற்றும், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நெல்சன் சேவியர் (ஒன் இந்தியா) 697 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றுள்ளனர். 
அதேபோல், நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட நீதிக்கான கூட்டணியை சேர்ந்த ஸ்டாலின் (புதிய தலைமுறை) 634 வாக்குகளும், அகிலா ஈஸ்வரன் (தி இந்து) 602 வாக்குகளும், பழனிவேல் (பாலிமர் டிவி) 596 வாக்குகளும், விஜயகோபால் (ஏஎன்ஐ) 509 வாக்குகளும் மற்றும் ஒற்றுமை அணியை சேர்ந்த கவாஸ்கர் (தீக்கதிர்) 584 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.