tamilnadu

img

சென்னையில் சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை!

சென்னை சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்து வந்த முத்தையா என்பவரது கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாதவரத்தில், சட்ட விரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையா என்பவரது கடையில் சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் அடைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 50 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. 
இந்த நிலையில்,சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையாவை போலீசார் கைது செய்தனர். கடையிலிருந்த தாய்ப்பால் பாட்டில்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கும் சீல் வைத்தனர்.
 

;