பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக் சென்னை அணிக்கு ஆதரவு
சென்னை, மே 11 முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க்கும் 2019ம் ஆண்டிற்கான பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க்கும் சென்னை ஸ்வாகர்ஸ் அணிக்கு குளியலறை சாதனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய ப்ரயாக், சென்னை ஸ்வாகர்ஸ் அணி ஆதரவு தெரிவித்துள்ளது.இந்திய தொலைக்காட்சி துறையினரை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக்கின் 4வதுசீசனில் 6 நட்சத்திர அணிகள் பங்கேற்க்கிறது. சென்னைஸ்வாகர்ஸ் அணியுடன் இணைவது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிதின் அகர்வால் கூறுகையில், பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக் இந்திய இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த லீக்கின் மிக முக்கிய அணியான சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் நாங்கள் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். திறமை வாய்ந்த இளம் வீரர்களை உடைய சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணைவதன் மூலம் எங்கள் நிறுவனம் இந்திய இளைஞர்களுடன் எளிதாக இணைய முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
அண்டை வீட்டாரை அறிந்து கொள்ளும் நிகழ்ச்சி
சென்னை, மே 11-ஆஷியானா ஹவுசிங் லிமிட்டெட் நிறுவனம், கடந்த 2005ம் ஆண்டு மூத்த குடிமக்கள் இணைந்து வாழ்வதற்காக “உங்கள் அண்டை வீட்டாரை அறிந்து கொள்ளுங்கள்”என்னும் தனித்துவமான திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்க்கான “உங்கள் அண்டை வீட்டாரை அறிந்து கொள்ளுங்கள்” நிகழ்ச்சி மறைமலை நகரிலுள்ள ஆஷியானா சுபம் குடியிருப்பு வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 55 வயது முதல் 85 வயதிற்க்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இசை, நடனம் மற்றும் பலவித கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.இது குறித்து நிறுவனத்தின் துணைத் தலைவர் பீட்டர் ராஜ், கூறுகையில், எங்களுடைய இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமே மூத்த குடிமக்கள் சுதந்திரமாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ ஊக்குவிப்பதே ஆகும். இந்த வளாகத்தில் குடியிருக்கும் மூத்த குடிமக்கள் உடல் அளவிலும், மனரீதியாகவும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள இத்தகைய நிகழ்ச்சிகள் பயன்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் மூத்த குடிமக்களின் ஆர்வமும், ஈடுபாடும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.
ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.1 கோடி பணம் பறிப்பு
சென்னை, மே 11-சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முகமது தாகிரிடம், புறம்போக்கு நிலம்தொடர்பாக சென்னை துரைப்பாக்கத்தில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சனை முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களையும் பறித்துள்ளனர். இது தொடர்பாக முகமது தாகிர் அளித்தபுகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களை தேடி வருகின்றனர்.