சென்னை,அக்.29- தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவ லாக மழையும், ஒரு சில இடங்க ளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி களில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அக்.30 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் அநேக இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்.31 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் அநேக இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ.1 மற்றும் நவ.2 ஆம் தேதி களில், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ.3 மற்றும் நவ.4 ஆம் தேதி களில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
சென்னையை பொறுத்தவ ரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்து டன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.