tamilnadu

img

தமிழகத்தில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் 

தமிழகத்தில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது.
தமிழகத்தில் நவம்பர் 11ம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நவம்பர் மாத பிற்பகுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரம், வீரகனூர், செங்கோட்டையில் தலா 4 செ.மீ.,  கூடலூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.  தமிழகத்தில் நவம்பர் 1 முதல் இன்று வரை மழை பொழிவு இயல்பைவிட 44 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது.