சென்னையில் இரு பள்ளிகளில் அறிவியலுக்கு புறம்பாக, சனாதனத்தை ஆதரித்து பேசிய மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் புகார் அளித்துள்ளார்.
பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்தும் வகையில் மகாவிஷ்ணு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.