tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

திமிங்கலத்தின் எச்சத்தை விற்க முயற்சி

நாமக்கல், ஏப்.19- ராசிபுரம் அருகே திமிங்கலத்தின் எச்சத்தை விற்க முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பேளுக் குறிச்சி, ஜிவிஆர் தோட்டம் என்ற பகுதியில் திமிங்கலத் தின் எச்சம் விற்பனை செய்யப்படவுள்ளதாக நாமக்கல் மாவட்ட வன பாதுகாவலர் கலாநிதிக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், ராசிபுரம் வன சரக அலுவலர் சத்யா  தலைமையிலான தனிப்படைபினர் ராசிபுரம் எல்லைக்குட் பட்ட வனச்சரகத்தில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப் போது பேருக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ப வர் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி  கார்களை சோதனை செய்தனர். அந்த காரில் ‘ஆம்பர்கிரிஸ்’  என்ற திமிங்கலத்தின் எச்சத்தை பதுக்கி வைத்திருந்ததும், அதை விற்க முயற்சி செய்தும் தெரியவந்தது. இதை யடுத்து வெங்கடேசன் (65), சேலம் மாவட்டம், அரிசிப்பாளை யம் பகுதியைச் சேர்ந்த ரவி (54), அம்மாபேட்டை பகுதி யைச் சேர்ந்த அப்துல் ஜெலில் (67) ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரை யும் சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்த னர்.

விபத்து – இளைஞர் உயிரிழப்பு

உதகை, ஏப். 19 – குன்னூரில் இருசக்கர வாகன விபத்தில், இளைஞர் ஒரு வர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் சேரம்பாடி ஒரேன்  சோலை அண்ணா நகரைச் சேர்ந்த ஹரிஷ் (29) மற்றும்  விமல் (27) ஆகிய இரண்டு இளைஞர்கள் வெள்ளியன்று கோவைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த னர். இவர்கள் குன்னூர் பாய்ஸ் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடு வதற்காக இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளனர். அப் போது எதிர்பாராதவிதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரத்தில் இருந்த இரும்புக் கம்பியில் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற  ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த விமல் பலத்த காயமடைந்தார். உட னடியாக அவரை மீட்ட பொதுமக்கள் குன்னூர் லாலி  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள் ளனர். இந்த சம்பவம் குறித்து வெலிங்டன் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற வுள்ளதை முன்னிட்டு, சனியன்று  தோட்டக்கலை - மலைப்பயிர் கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், ஆய்வு மேற் கொண்டார்.

சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஏப்.19- சோமனஅள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது சோமனஅள்ளி கிராமம். இக்கிராமத்தின் வழியாக தருமபுரி -  பாலக்கோட்டுக்கு செல்லும் முக்கிய சாலை செல்கிறது.  ஆனால், இச்சாலையானது சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு  ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன  ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு வரு கின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரங்க ளில் சாலையிலுள்ள பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள் ளாகி வருகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

ஊக்க மருந்துகளை உடற்பயிற்சி கூடங்களுக்கு சப்ளை செய்ய முயன்ற 2 பேர் கைது

மேட்டுப்பாளையம், ஏப். 19- மேட்டுப்பாளையத்தில் மருத்துவர்கள் அனுமதியின்றி பயன்படுத்த கூடாத ஊக்க மருந்துகளை உடற்பயிற்சி கூடங்களுக்கு சப்ளை செய்ய முயன்ற இருவர் கைது செய் யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பளு தூக்குதல் பயிற்சி கூடம் நடத்தி வருபவர் செந்தில்குமார் (40).இவரிடம் பயிற்சியாள ராக பணியாற்றி வருபவர் சங்கர் (36). இருவரும் கோவை  மாநகர், அன்னூர், அவிநாசி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் உடற்பயிற்சி கூடங்களுக்கு  மருத்துவ விதிகளை மீறி சட்டவிரோதமாக ஊக்க மருந்து களை சப்ளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் காவல்துறையின ருக்கு கிடைத்த தகவலின்படி சனியன்று மேட்டுப்பாளையம் -  அன்னூர் சாலையில் காவல்துறை ஆய்வாளர் சின்னகா மணன் தலையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி  சோதனை நடத்திய போது பத்துக்கும் மேற்பட்ட அட்டை  பெட்டிகள் நிறைய பல்வேறு வகை மருந்துகள் இருந் ததை கண்டறிந்தனர். பிடிப்பட்ட மருந்துகள் குறித்து சுகாதா ரத்துறையை சேர்ந்த மருத்துவர்களிடம் போலீசார் விசா ரித்த போது பிடிபட்ட டெர்மிலோ, சல்பேப், பெமண்ட், நாப்ரோ பென், மெபந்தர்மைன் ஆகிய மருந்துகள் நோயாளிக ளுக்கு அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமலும், கடும்  ரத்த இழப்பு ஏற்படும் போது அவசர காலத்திற்கு இருக்கும்  குறைந்த ரத்தத்தை வேகமாக ஓடும் வகையிலும் பயன் படுத்தப்படும் மருந்துகள் என்றும் இவை மருத்துவர்களின் அனுமதி இன்றி இவற்றை விற்பதோ பயன்படுத்துவதோ கூடாது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிடிபட்ட மருந்துகளை பறிமுதல் செய்த தோடு இவற்றை கொண்டு வந்த செந்தில்குமார் மற்றும்  சங்கர் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களி டம் இருந்த ரூபாய் 28 ஆயிரம் மற்றும் மூன்று செல்போன் கள், சட்ட விரோதமாக மருந்துகளை கடத்தி வர பயன்படுத் திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இரு வரும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி தடை செய்யப் பட்ட மருந்து விற்பனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.