tamilnadu

டாக்டர் அம்பேத்கர் விருது பெறும் விவசாயிகள்

சென்னை,ஜன.12- டாக்டர் அம்பேத்கர் விருது பெறும் விவசாயிகள் சங்கத் தலைவர் பெ. சண்முகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வரு மாறு: பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது.

2023  ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர்  விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பின ரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பெ. சண்முகம் அவர்களுக்கும்,  சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது  சமூக நீதி கண்காணிப்புக்குழு தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விருது பெறும் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது  வாழ்த்துக்களையும், பாராட்டுக்களை யும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் உரிமை களுக்காகவும், முன்னேற்றத்திற்காக வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது போராடி வருகிறது.

வாச்சா த்தி  மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் எண்ணற்ற மக்கள் இயக்கங்களையும், சட்டப் போராட்டங்களையும் நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியினை பெற்றுத் தந்தது. இந்த நீண்ட போராட்ட பயணத்தில் தோழர் பெ. சண்முகம் தொடக்கக் காலம் முதல் அயராது பணியாற்றியவர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவராக பணியாற்றிய காலத்தில் மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பது சாலப்பொருத்தமாகும். மேற்கண்ட இருவருக்கும் விருது களை வழங்கியுள்ள தமிழ்நாடு  முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக் களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.