tamilnadu

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டு விழா! பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

சென்னை, மே 16 - தமிழ்நாட்டில் பத்தாம் மற்றும்  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர் வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு சென்னையில்  பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில், ஒட்டுமொத்தமாக 94.56 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் மட்டும் 91.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக  397 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வெழுதிய அனைத்து மாண வர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்ப் பாடத்தில் 35 மாணவர்கள் 100 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

இதேபோல பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வில் 91.55 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகித 87.90 ஆகும். 1364 அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவிகிதம் தேர்ச்சியை எட்டி யுள்ளன. 8 பேர் தமிழ்ப் பாடத்தில் 100 சதவிகித மதிப்பெண்களை எடுத்தனர். 

ஒட்டுமொத்தமாக மொத்தம் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 1761 அரசுப்  பள்ளிகள் இவ்வாண்டு 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் மேலும் ஓர் மைல்கல் ஆகும்.

இந்நிலையில், “இத்தனை வெற்றி களுக்கும் காரணம் தமிழ்நாடு முதலமைச்சரின் பல்வேறு மாணவர் மைய திட்டங்களும், சிறப்பான வழிகாட்டல்களும் ஆகும் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டும் வண்ணம் சென்னையில் ஒரு சீர்மிகு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித் துள்ளது.

இவ்விழாவில் தமிழ்ப் பாடத்தில் 100 சதவிகித மதிப்பெண் பெற்ற பத்து  மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாண வர்கள் 43 பேர் கவுரவிக்கப்பட உள்ளனர்.

மேலும், இப்பாராட்டு விழாவின் போது ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற 5 தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குவதுடன், 100 சதவிகிதம் எட்டிய தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து கருத்துகள் பரிமாற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நடவடிக்கைகள் மேலும் அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும்.

இந்த பாராட்டு விழா, ஒவ்வொரு ஆண்டும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 100 சதவிகித இலக்கை எட்ட வழிவகை செய்யும்” என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.