tamilnadu

பேரிடர் நிவாரண நிதி: வஞ்சிக்கும் ஒன்றிய அரசு

சென்னை, டிச. 10- பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கி றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்  தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி யுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர் நிவாரண நிதியாக 7,532 கோடி ரூபாயை கடந்த 13.6.2023 அன்று 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது . இதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 450 கோடி ரூபாய் மட்டுமே. 6 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை, புயல் பாதித்த பிறகு ஏதோ தமிழ்நாட்டுக்கு வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்தியில் ஆளும் மோடி அரசும், இங்குள்ள பாஜக வினரும் முனைந்திருக்கிறார்கள். 70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிக கனமழை பெய்து பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதி  ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட 450 கோடி ரூபாயை மிக்ஜம் புயல் நிவாரணத்திற்கு பொய்  கணக்கு காட்டுகிறார்கள்.

வழக்கமான மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி  போன்று கணக்குக் காட்டி ஏமாற்றுகிறது ஒன்றிய நிதித்துறை அமைச்சகம். மிக்ஜம் புயல் நிவாரணமாக 1011.29 கோடி ரூபாய் ஒன்றிய அரசு வழங்கியதாக அண்ணா மலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும்,  மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு. 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிக்ஜம் புயல் நிவாரணம் ஆகும். 561.29 கோடி ரூபாய் என்பது இனி வரும் காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள வெள்ள அபாய தடுப்புப் பணி திட்டத்துக்கான நிதியாகும்.

மிக்ஜம் புயல் இடைக்கால நிவாரண  நிதியாக முதலமைச்சர் கேட்டது ரூ.5,060 கோடி. ஆனால் யானைப் பசிக்கு  சோளப்பொரி போல வெறும் 450 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாட்டை வழக்கம்போல் ஒன்றிய அரசு வஞ்சித்திருக்கிறது என அதில் தெரிவித்துள்ளார்.