மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி
ஆலந்தூர், ஆக.8- தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் அருகே ஜி.எஸ்.டி. சாலையுடன் இணையும் பகுதிக்கு அருகே உள்ள மேம்பாலத்தில் வியாழ னன்று (ஆக.8) காலை ராதாகிருஷ்ணன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனம் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தில் இருந்து 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்தி லேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்கு வரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராதா கிருஷ்ணன் உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
ரூ.2 கோடி மதிப்பிலான தேக்குமரம் பறிமுதல்
செங்குன்றம், ஆக.8- செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் ரூ.2 கோடி மதிப்புள்ள தேக்கு மரம் கடத்தி வரப்பட்ட தாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு அசாம் மாநிலம் மோரே பகுதியில் இருந்து ஒரு லாரியில் உரிய ஆவணமின்றி தேக்கு மரம் கடத்தி கொண்டு வரப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தேக்கு மரங்கள் சோழவரத்தை சேர்ந்த பாலமுருகனுக்கு கடத்தி வரப்பட்டதும், அவர் அதனை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் அண்ணாதுரை (42) கைது செய்யப்பட்டார்.
நாளை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்
சென்னை, ஆக.8- சென்னை குடிநீர் வாரியம் சார்பில் திறந்த வெளி கூட்டம் மாதந்தோறும் 2 ஆவது சனிக்கிழமையில் நடைபெற்று வருகிறது. இந்த வகையில்,இம்மாதத்துக்கான கூட்டம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடை பெறுகிறது. பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து நேரில் மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.