tamilnadu

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகள் உறுதிமொழியேற்பு

சென்னை:
விவசாயிகள் விரோத வேளாண்சட்டங்களுக்கு எதிராக அக்டோபர் 2 அன்று  விவசாயிகள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில்அனைத்து விவசாயிகளும் பங்கேற்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி இந்திய விடுதலைக்கு வழிவகுத்தவர் காந்திஜிஅவர்கள். அவருடைய பிறந்தநாளானஅக்டோபர்-2 ஆம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை நடத்திட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

இந்த அறைகூவலை ஏற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக் கான கிராமங்களில் அக்டோபர் 2 ஆம்தேதி மாலை 5 மணியளவில் விவசாயிகள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.மத்திய அரசின் வேளாண் விரோதச் சட்டங்களை ஆதரிக்கும் துரோகிகளை புறக்கணிப்போம். விவசாய விரோதச் சட்டங்களை அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம். இந்திய விவசாயத்தை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்ய வழிவகுக்கும் சட்டங்களை திரும்பப் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியேற்கிறோம்.விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் அன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்று மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.