tamilnadu

img

பாலியல் அத்துமீறல் குறித்து நடிகைகள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம் நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி பேட்டி

சென்னை, செப்.8-  பாலியல் அத்துமீறல் குறித்து தொலைபேசி, மின்னஞ்சலில் நடிகைகள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம் என்று நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க 68 ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் செப்டம்பர் 8 ஞாயிறன்று நடைபெற்றது. 

சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடை பெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கரு ணாஸ், பூச்சி முருகன் மற்றும் நடி கர், நடிகையர்கள் பலர் பங்கேற்ற னர்.  

தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டி த்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்க கட்டிட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நடிகர் கார்த்தி கூறுகையில், நடிகைகள் புகாரளிக்க, நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவ ரிடம் துணிச்சலாக புகாரளிக்கலாம் என்றும்  கேட்டுக் கொண்டார். 

அச்சமின்றி முன்வாருங்கள் 

திரைக் கலைஞரும் நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி பேசுகையில்,“2019 ஆம்  ஆண்டிலேயே கமிட்டி உருவாக்கப் பட்டுள்ளது. நடிகர், நடிகை மட்டும் இன்றி யாரும் புகார் கொடுக்கலாம். வழக்கறிஞர், என்ஜிஓ கமிட்டியில் உள்ளனர். புகார் குறித்து வெளியே தெரிவிக்கப்படாது. எந்த பெண்ணும் பயத்துடன் இருக்க கூடாது. எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம்.

இதுவரை சங்கத்தில் சில பாலியல் புகார்கள் வந்து, அவற்றை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். இதுபற்றி பாதிக்கப்பட்டவர் விவரம் வெளியே தெரியாமல் பாதுகாக்கும் நோக்கத்தில், வெளியே நாங்கள் சொல்லவில்லை. வெளியே சொல்ல வில்லை என்பதால் புகாரே வர வில்லை, நாங்கள் தீர்த்து வைக்கவே இல்லை என்பது பொருள் இல்லை.

நாங்கள் சொல்வதெல்லாம் எந்தப் புகார் என்றாலும், சங்கத்தை அணுகி புகார் கொடுங்கள். பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம். புகார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் 5  ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப் படும். புகாரளிப்பதை எளிமை யாக்க, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப் பட்டுள்ளது. அதை நடிகைகள் பயன்படுத்தி புகார் அளிக்கவும் என்று கேட்டுக்கொண்டார்.  

பின்னர் நடிகர் சங்கத் தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “பொதுக்குழு முன்பு இருந்த சவால்களை மீறி பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது. பொதுக்குழு மகிழ்ச்சியாக நடந்துள்ளது. சங்கர தாஸ் சுவாமிகள் பெயரில் டெல்லி கணேஷ், விஜயகுமாரி, 10 நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.