சிதம்பரத்தில் பேருந்து மீது வேன் மோதி விபத்து
சிதம்பரம், ஜூன் 25 - கடலூரில் வரு வாய்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தர்ணா போராட் டத்தில் பங்கேற்க சென்ற வருவாய்த்துறையினர் விபத்துக்குள்ளாகி 10க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர். சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பணியாற்றும் வருவாய்த்துறை யினர் புதன்கிழமை வேனில் புறப்பட்டு கடலூர் நோக்கி சென்றனர். இந்த போராட் டத்தில் பங்கேற்பதற்காக பயணம் மேற்கொண்ட அவர்கள் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் செல்லும்போது எதிரே சென்ற பேருந்து திடீரென பிரேக் போட்டது. இதன் காரணமாக பின்னால் சென்ற வேன் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த வருவாய்த்துறையினர் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பிறகு, அவசர ஊர்தி மூலம் மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட னர். இதனையறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், குமராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர், அண்ணா மலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து விசாரித்தறிந்தனர்.
கடலூரில் பாதுகாப்பு ஒத்திகையில் 5 பேர் பிடிபட்டனர்
கடலூர், ஜூன் 25- மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் ஒன்றிய-மாநில அரசுகள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றன. புதன் மற்றும் வியாழக்கிழமை 2 நாட்கள் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஒத்திகையின் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடலூர் கடற்கரையில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் இரண்டு படகுகளில் மர்மநபர்கள் வருவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் அந்த 2 படகுகளையும் சுற்றி வளைத்தனர். அந்த படகில் இருந்தவர்களிடம் போலி வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் இருந்தது. இவர்கள் சுங்கத்துறை மற்றும் இந்தியன் நேவி, இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் கடலூர் மாவட்டத்தில் ஊடுருவி கடலூர் துறைமுகத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வியாழக்கிழமை மாலை வரை இந்த ஒத்திகை நடைபெறுவதால் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பி.எம்.கிசான் உதவித்தொகைக்கு தனி அடையாள எண் கட்டாயம்
விழுப்புரம், ஜூன் 25- விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறும் 89,958 விவசாயிகளில் 65,336 பேர் மட்டுமே இதுவரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 24,622 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் விவரங்களுடன் வேளாண் துறை அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு செய்ய வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும் என்று ஆட்சியர் அலுவலகம் கூறியுள்ளது.
ஓசூரில் சட்டம், பொறியியல் கல்லூரிகள் அமைக்கக் கோரிக்கை
கிருஷ்ணகிரி, ஜூன் 25- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஓசூர் வட்ட அமைப்புக்குழு மாநாடு சேகர் தலைமையில் ஓசூரில் நடைபெற்றது. முன்னாள் ஒன்றியச் செயலாளர் நாகேஷ்பாபு துவக்க உரையாற்றினார். மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், மாநகராட்சி உள்ளிட்ட ஓசூர் வட்டத்தில் சட்டக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி துவங்க வேண்டும், ஓசூர் பேருந்து நிலையம் முகப்பில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஏழு பேர் கொண்ட வட்ட அமைப்பு குழுவிற்கு ஹரிநந்தா ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.