எழும்பூர் தொகுதியில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஏற்பாடு!
சென்னை, ஜூன் 26- எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த பொது மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், அவர்கள் தமக்குப் பயனளிக்கக்கூடிய திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளு வதற்கும் கனெக்ட்வித் எம்எல்ஏ (Connect with MLA) என்றொரு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரியில் தொடங்கி ஏப்ரல் வரையில் எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 29,000 குடும்பங்களை நேரில் சந்தித்து, அரசின் எந்தெந்த திட்டங்களின் கீழ் அக்குடும்பங்கள் பயன் அடைந்திருக்கின்றன மற்றும் அவர்களது தேவைகள் என்ன என்பதைக் கேட்டறிந்து வகைப்படுத்தியுள்ளதாக கூறிய சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். இப்பிரச்சாரத்தின்போது பல குடும்பங்கள் தமக்குக் குடும்ப அட்டை தேவை எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இக்குடும்பங்களின் கோரிக்கையை நிறை வேற்றித் தரும் விதத்தில், எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டை இல்லாத குடும்பங்கள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாமொன்று சனிக்கிழமையன்று (ஜூன் 28) காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரையில் சென்னை-புரசைவாக்கம், ராஜா அண்ணாமலைசாலையில், தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் நடை பெற உள்ளது. எனவே, எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த புதிய குடும்ப அட்டை தேவைப்படும் குடும்பங்களும், தமது குடும்ப அட்டையில் பெயர் நீக்க மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க விரும்பு வோரும் ஆதார் அட்டை, எரிவாயு இணைப்பு ரசீது உள்ளிட்ட உரிய சான்றா வணங்களோடு முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்ஐசியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அந்நிய முதலீட்டை 100 விழுக்காடாக உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும், பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 26) சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் தலைவர் கே.கிரிதர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை பகுதி -1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், அகில இந்திய எல்ஐசி ஊழியர் சம்மேளன தென்மண்டல பொதுச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.