tamilnadu

img

தனியார் ஆலையில் 73 தொழிலாளர்கள் சட்டவிரோத பணிநீக்கம்!

 தனியார் ஆலையில் 73 தொழிலாளர்கள் சட்டவிரோத பணிநீக்கம்! 

மீண்டும் பணியமர்த்த சிஐடியு கோரிக்கை

திருவள்ளூர், ஏப்.24- இந்தியன் பர்னிச்சர் தொழிற்சாலையில் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட  73 தொழி லாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் அருகில் உள்ள காக்களூர் தொழிற்பேட்டையில் இந்திய தொழிலதிபர் பிர்லா குரூப், இந்தியன் பர்னிச்சர் ப்ராடக்ட் என்ற நிறுவனத்தை துவங்கியது. இதில் மரத்தாலான வீட்டு உபயோகப் பொருட்கள் கட்டில், பீரோ, அலமாரி,  டைனிங் டேபிள் போன்ற பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் 1998 ஆம் ஆண்டு திறக்கப்  பட்டது. இந்த நிறு வனத்தில் 105 நிரந்தர தொழி லாளர்கள்,  150 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் 100 பேர் என மொத்தம் 350 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியா முழுவதும் கிளைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு வாக்கில், விற்பனை சிறிது மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நிறுவனத்தின் நிதி நிலைக்கு ஏற்ப சிறிய அளவிலான ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு ள்ளது. இதனை தொடர்ந்து  இந்த நிறுவனம் போலந்து நாட்டை சேர்ந்த முதலா ளிக்கு கைமாறியது. இது இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளிலும் பொருட்களை விற்பனையை விரிவு படுத்தியது. இந்த சூழலில் தொழி லாளர்கள் ஏற்கெனவே பெற்ற உரிமைகள், சலு கைகள் மறுக்கப்பட்டதோடு, ஆட்குறைப்பும் நடை பெற்றது.  விற்பனை தேக்கத்தை காரணம் காட்டி 2020 ஆம் ஆண்டு போட வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தை 2022ல் தான்  போடப்பட்டது. எனினும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் தொடர்ந்து இயங்கி வந்த இந்நிறுவனம் 2024-மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தொழி லாளர்களுக்கு 45 நாட்கள் லேஆப் விடப்பட்டது.  மேலும் 45 நாட்கள் லேஆப் என சொல்லி அதில் பணியாற்றி வந்த 73 தொழிலாளர்களையும் 2024 ஜூலை 31 அன்று சட்ட விரோத பணிநீக்கம் செய்துள்ளது.  இந்த நிலையில் வியாழனன்று (ஏப் 24), திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கி பேசுகையில், “இந்நிறுவனத்தில் உள்ள ஒருபகுதி தொழிலா ளர்களை நிர்வாகம் சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்தது”என்றார். தற்போது, அதிகாரி கள் மட்டும் வந்து செல்கின்ற னர். நிறுவனம் இன்னும் மூடப்படவில்லை. விற்பனை இல்லை என்ற பொய்யான காரணத்தை கூறி நிறுவனத்தை லே ஆப் விட்டுள்ளனர். இது சட்ட விரோதமாகும். அரசின் அனுமதி இல்லாமல் ஆலையை மூடுவதோ,  லேஆப் விடுவதோ தவறான நடவடிக்கையாகும். அதில் உள்ள தொழிலாளர்களை தானாக அறிவித்து வெளி யேற்றியுள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிறுவனத்திற்கு எதிராக,   தமிழ்நாடு அரசும்,  தொழி லாளர் துறை, மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட 73 தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்,  உற்பத்தி செய்த சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள மர  பொருட்களை, மூலப்  பொருட்களை   நிர்வாகம் வெளியே எடுத்து செல்ல முயற்சிக்கிறது. இதை மாவட்ட நிர்வாகமும்,  காவல்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சவுந்தரராசன் கோரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் கே.விஜயன்,  மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், பொரு ளாளர் என்.நித்தியா னந்தம், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.வினாயக மூர்த்தி, துணைத் தலைவர் கே.ஜ.முரளிதரன், கிளை செயலாளர் எஸ்.கணபதி, பொருளாளர் எச்.கிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்.கீதா உள்ளிட்ட பலர் பேசினர். இதில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.