tamilnadu

img

குளிர்சாதன பெட்டி வெடித்ததில் 3 பேர் பலி

ஊரப்பாக்கத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் கோதண்டராமன் நகரில் கிரிஜா என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டியின் கம்ப்ரஸர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டிலிருந்த கிரிஜா( 63) அவரின் தங்கை ராதா(55), ராஜ்குமார்( 48) ஆகிய மூன்று பேரும் மூச்சு திணறி இறந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.