“பெட்ரோல் - டீசல் விலை ரூ. 100-க்கும் அதிகமாகவும், கேஸ் விலையை ஆயிரம் ரூபாய் வரையும் உயர்த்திவிட்டது. அதுமட்டுமல்ல, வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று ஏழை மக்களிடமிருந்து 21 ஆயிரம் கோடி ரூபாயை மோடி அரசு சுருட்டியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ. 1.50 லட்சம் கடனை சுமத்தியதுதான் மிச்சம்” என்று காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.