tamilnadu

img

நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

திருவண்ணாமலை, ஜூலை 3- திருவண்ணாமலையை அடுத்த  வெறையூர் அருகே உள்ள திருவனை முகம் வலைச கிராமத்தில் வசிப்பவர்  ராஜசேகர்.  இவரது மகள் யாழினி (7), மகன் விஷ்வா (4). இருவரும் வியாழக்கிழமை (ஜூலை 2) மாலை அங்குள்ள  துரிஞ்சில் ஆற்றில் குளிக்கச் சென்றனர்.  ஆற்றின் ஒரு பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் குளித்த சிறுவர்கள், திடீரென நீரில் மூழ்கினர். அருகில் இருந்த சிறுவன் ஊருக்குள் சென்று குழந்தைகள் நீரில் மூழ்கியதை தெரிவித்தான். ஊர் மக்களும், பெற்றோரும் ஓடிச் சென்று பார்த்த போது குழந்தைகள் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெறையூர் காவல் துறையினர் குழந்தைகளின் உடலை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.