போரூர்,பிப்.29- விருகம்பாக்கம் அய்யப்பா நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சம்ப வத்தன்று மதுரவாயல் சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2பேர் ஆறுமுகத்திடம் முகவரி கேட்பது போல நடித்து திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், ரூ.550 பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் கூச்சலிட்டார். உடனடி யாக அங்கு நின்ற லாரி ஓட்டுநர்கள் இருவரை யும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் காவல்துறையி டம் ஒப்படைத்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது ஓட்டேரியைச் சேர்ந்த முருகன், தண்டையார்ப்பேட்டையை சேர்ந்த அப்துல்கரீம் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து காவல்துறையினர் அவர்களிடமிருந்த பணம், செல்போன், கத்தி ஆகியவை பறிமுதல் செய்தனர்