நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி!
காத்மாண்டு, ஜூலை 24- நேபாளத்தில் புதனன்று நிகழ்ந்த விமான விபத்தில் 18 பேர் பலியாயினர்.
நேபாளத்தின் காத் மாண்டு விமானநிலையத் தில் இருந்து புதன்கிழமை காலை காலை 11:11 மணி க்கு, சவுரியா ஏர்லைன்ஸின் 9-என்ஏஎம்இ (9N-AME (CRJ 200) என்ற விமானம் போக்காராவுக்கு இரண்டு பணியாளர்கள் உட்பட 19 பேருடன் புறப்பட்டது. விமா னம் புறப்பட்ட சில விநாடி களிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானம் தீப்பற்றி அதிலிருந்த குழந்தை உட் பட 18 பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயங் களுடன் உயிர்பிழைத்த விமானத்தின் கேப்டன் எம்ஆர் ஷக்யா சினமங்க லில் உள்ள கேஎம்சி மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தில் பலியானவர்கள், விமானம் ஒன்றை பராமரிப்பதற்காக போக்காராவிற்கு சென்ற வர்கள் என காவல்துறை யினர் தெரிவித்தனர்.
மேகதாதுவுக்கு அனுமதியா? ஒன்றிய அரசு மறுப்பு
புதுதில்லி, ஜூலை 24 - காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், 67 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில், ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய அணை கட்டுவதற் கான முயற்சிகளை கர்நாடக அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு புதிய அணை கட்டப்பட்டால், தமிழகத்து க்கு தற்போது கிடைக்கும் உபரிநீர்கூட கிடைக்காது என்பதால், மேகதாது திட்ட த்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், மேகதாது விரிவான திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளி த்துள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு, மேகதாது அணை கட்டுவதற்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்று ஒன் றிய அரசின் நீர்வளத்துறை தரப்பில் பதில் அளிக்கப் பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் புதிய ரேசன் அட்டைகள்
சென்னை, ஜூலை 24 - தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டை கள் உள்ளன. 26 ஆயிரத்து 502 முழு நேர நியாய விலை கடைகளும், 10 ஆயிரத்து 452 பகுதி நேர கடைகளு மாக மொத்தம் 36 ஆயிரத்து 954 ரேசன் கடைகள் உள்ளன.
இந்நிலையில், புதிதாக குடும்ப அட்டை கோரி 2 லட்சம் 81 ஆயிரம் பேர் விண் ணப்பித்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் புதிய அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் குடும்ப அட்டை யில் மாற்றம், புதிய அட்டைக் கான விண்ணப்பத்தை www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக வும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“அரசைப் பொதுவாக நடத்துங்கள்; பழிவாங்கல் வேண்டாம்” : முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 27 - இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் போராட்டத்தையொட்டி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், “ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்..
பிரதமர் மோடி அவர்களே, ‘தேர்தல் முடிந்து விட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னீர்கள்... ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!.
அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.