tamilnadu

தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் வின் ஃபாஸ்ட்

சென்னை, ஜன.7- வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவன மான வின் ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் ஜன.7 அன்று கையெழுத்தா கிறது. தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை  வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள தாவது:-உலகின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனம் தமிழ் நாட்டில் தொழில் தொடங்குவது உறுதி செய்துள்ளது. அவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, ரூ. 16,000 கோடி மதிப்பில் தூத்துக் குடியில் ஈவிகார் மற்றும் மின்கலம் உற்பத்தித் தொழிற்சாலை வின்  ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்க வுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல;  தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்.  

தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளலாம் வின் ஃபாஸ்ட் நிறுவனத்தாருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.