சென்னை, மே 9- தமிழக அரசின் அண்ணல் அம் பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் தமிழ்நாட்டில் 1,303 ஆதி திராவிட மகளிர் மற்றும் இளைஞர் களை தொழில் உரிமையாளர்களாக மாற்றி சாதனை படைத்துள்ளதாக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு வரு மாறு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒடுக்கப்பட்ட சமுதாயத் தின் முன்னேற்றத்திற்காக, “அண் ணல் அம்பேத்கர் தொழில் முன் னோடிகள் திட்டம்” எனும் புதிய திட்டம் 2023 – 2024ஆம் ஆண்டு மே தினத்தில் அறிவித்து, திட்டத்திற்கு ரூ.100 கோடி அனுமதித்தார். இந்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டமானது, பட்டி யல் இன மற்றும் பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனை வோராக்கும் திட்டமாகும்.
அவற்றின் பயனாகப் பட்டிய லின-பழங்குடியின இளைஞர்களி டமிருந்து தொழில்கள் தொடங்கு வதற்காக இணையத்தின் மூலம் மொத்தம் 12,472 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 7,365 விண்ணப்பங் கள் தேர்வு செய்யப்பட்டு, பல் வேறு வங்கிகளுக்குப் பரிந்துரை கள் செய்யப்பட்டன.
ரூ.159.76 கோடி மானியம்
ஆதி திராவிட இளைஞர் களுக்கு ஊக்கமளிக்கும் வகை யில் கடந்த நிதியாண்டில் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 பயனாளிகளுக்கு வங்கி களால் கடன்கள் அனுமதிக்கப்பட் டன. மேலும், இணையம் வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக யுக்தி கள், வரவு-செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின் கீழ் தொழில் முனைவு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைவோருக்கு அரசு மானிய மாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 288 மக ளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற் றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியுடன் வங்கிக் கடன்கள் பெற்று ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் பலர், பல்வேறு தொழில்களைத் தொடங்கி தொழில் உரிமையாளர் களாக ஆகியுள்ளனர்.
வாழ்க்கையை மாற்றியது
சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் பயன்பெற்ற எஸ். அஞ்சலி கூறுகையில், “நார் இழை பைகள் நெய்யும் தொழில் தொடங்க எண்ணியிருந்தேன். தமிழ்நாடு அரசின் குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அண் ணல் அம்பேத்கர் தொழில் முன் னோடிகள் திட்டம் பற்றி அறிந்தேன். பின்னர், சிவகங்கை மாவட்டத் தொழில் மைய அலுவலகம் சென்று எனது நார் இழை பைகள் நெய்யும் தொழில் தொடங்குவது குறித்துத் தெரிவித்தேன்.
அதனைத்தொடர்ந்து, இணை யதளம் வாயிலாக இத்திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.32,70,000 வங்கிக் கடன் பெற்று, அதற்கு 35 சதவீத மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் பெற்று தொழில் தொடங்கினேன். தற்போது 10 பணியாளர்கள் எனது நார் இழை பைகள் நெய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இதன்மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் வருவாயும், ரூ.70 ஆயிரம் லாபமும் பெறு கிறேன்.
இத்திட்டம் என்னைப்போன்ற தாழ்த்தப்பட்ட பெண்களின் சுய தொழில் முயற்சிகளுக்கு ஊக்கம ளித்து எங்கள் வாழ்க்கையையே மாற்றி வருகிறது என்றார்.
அம்பேத்கர் பெயரில் அருமையான திட்டம்
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முகவரான சந்தோஷ்,”தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் தொடங்க இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தேன். தூத்துக்குடி மாவட்டத் தொழில் மைய அலுவலகம் மூலம் ரூ.1 கோடியே 96 லட்சத்து 92 ஆயிரம் வங்கிக் கடன் கிடைத்தது. அதில், 35 சதவீதத் தொகையான 60 லட் சத்து 32 ஆயிரம் ரூபாய் எனக்கு மானியமாக அரசிடம் இருந்து வந் தது.
இந்த நிதியைக் கொண்டு தீப் பெட்டி தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினேன். தீப்பெட்டிகள் விற்பனையில் எனக்கு மாதம் ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. என்னு டைய தொழில் நிறுவனத்தில் 15 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஓர் அருமை யான திட்டத்தை தொடங்கி ஆதி திராவிட சமுதாய இளைஞர்க ளைத் தொழில் முதலாளிகளாக உயர்த்தும் முதலமைச்சருக்கு நன்றி என்று தெரிவித்தார்.