tamilnadu

img

‘இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி’ ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த வீடியோ

சென்னை, மே 5- சர்ச்சைக்குரிய கேரளா ஸ்டோரி திரைப்படம் வெள்ளியன்று வெளியாகி உள்ள நிலையில், ‘இதுதான் உண்மை யான கேரளா ஸ்டோரி’ என வெளியான வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா  ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகி யோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ வெள்ளியன்று வெளியாகி உள்ளது. தென் மாநிலத்தில் காணாமல் போன தாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண் களின்” பின்னணியில் உள்ள நிகழ்வு களை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாக வும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடு படுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை கூறுகிறது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் போராட்டங்களுக்கு இடையே, படத்தின் வெளியீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலை யிட மறுத்துவிட்டது. இந்நிலையில், நீதிமன்றங்கள், விசா ரணை அமைப்புகள் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்சனையை எழுப்பு வதன் மூலம் மாநிலத்தை மத தீவிர வாதத்தின் மையமாக சித்தரிக்கும் சங் பரிவார் அமைப்புகள் பிரச்சாரத்தை கை யிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார் 

இந்த திரைப்படத்தை தமிழ் நாட்டில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில் வெளியிடக் கூடாது என அரசுக்கு பல்வேறு அமை ப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. தமிழ்நாடு உளவுத்துறைக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை வெளியிட்டால் பல் வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில உள வுத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி என தலைப்பிட்டு “காம்ரேட் ஆஃப் கேரளா” எனும் ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற திரு மணம் குறித்த வீடியோ பகிரப்பட்டுள் ளது. இந்த திருமணம் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள காயம்குளம் பகுதியில் உள்ள செருவாலி  முஸ்லிம் ஜமாத்தின் சார்பில் பள்ளிவாச  லில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஆலப்புழா எம்பி ஆரிப் கலந்துகொண்டார். அஞ்சு மற்றும் சரத் ஆகிய ஜோடிக்கு  இந்து மத சடங்குகளின் படி  பள்ளிவாசலில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு நடத்தி வைத்த திருமணம் பெரிய அளவில் பேசு பொரு ளானது. கேரளா ஸ்டோரி படம் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அஞ்சு மற்றும் சரத் இருவருக்கும் இந்து முறைப்படி பள்ளிவாசலில் நடைபெற்ற திருமணம் தொடர்பான காணொளியை ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்து “மனிதகுலத்திற்கான அன்பு என்பது நிபந்தனையற்றது மற்றும் ஆற்றுப்படுத்தக் கூடியது” என்று குறிப்பிட்டுள்ளார்.