tamilnadu

img

சவூதி அரேபியா: சாலை விபத்தில் சிக்கி 35 வெளிநாட்டினர் பலி

சவூதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 வெளிநாட்டினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மெதினாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று புறப்பட்டது. இந்தப் பேருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள அல் அகால் எனும் கிராமம் அருகே, ஹிஜ்ரா சாலையில் வந்தபோது, எதிரே வந்த கனரக வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதைத்தொடர்ந்து பேருந்து தீப்பிடித்ததால், ஏராளமான பயணிகள் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் உயிரிழந்தனர். சிலர் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்த 4 பயணிகள் மெதினாவில் உள்ள அல்-ஹம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.