கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. 34,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம், 1,540 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிள்ளதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா மட்டுமின்றி, 25-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில், 270 பேருக்கு, இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஜப்பானில் 41 பேரும், தாய்லாந்தில் 32 பேரும், அரபு நாடுகளில் பதிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.