tamilnadu

img

ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வாலிபர்கள் முழக்கம்

ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வாலிபர்கள் முழக்கம்

சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை நிறை வேற்ற வேண்டும், என வலியுறுத்தி  வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், பருவாய் கிராம ஊராட்சி யில் வித்யா என்ற பெண்ணை, சொந்த சகோதரனே சாதி ஆண வப்படுகொலை செய்துள்ளார். இத னைக் கண்டித்தும், ஆணவப்படு கொலைக்கு எதிராக சிறப்பு சட் டத்தை நிறைவேற்ற வேண்டும், என  வலியுறுத்தி இந்திய ஜனநாய வாலி பர் சங்கத்தின் பல்லடம் ஒன்றியக் குழு சார்பில் புதனன்று மாலை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பல்லடம், கொசவம்பாளையம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் சி.முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.அருள்  கண்டனவுரையாற்றினார். இதில்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநிலச் செயலாளர் சி.கே. கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பரமசிவம், திராவிடர் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந் தில்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சங் கத்தின் மாநிலப் பொருளாளர் பாரதி  நிறைவுரையாற்றினார்.