tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

உதகை, ஏப்.13- உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் வரு வாய்த்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமு தல் செய்து அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக் கும் வகையில் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் தட்டு கள், டம்ளர்கள், வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட 19 வகை யான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர் வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல் நீலகிரிக்கு, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டால் வாகனத்தை பறி முதல் செய்து, கருப்புப்பட்டியலில் வைக்க சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை  முற்றிலும் தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலை யில், உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, உதகை -  மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள பன்சிட்டி பகுதியில் ஞாயிறன்று, அனைத்து வாகனங்களிலும் உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ் தலைமையில் வருவாய்த் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வாகனங்களில் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தும், அப ராதங்கள் விதித்தும் தொடர்ந்து இதுப்போன்ற செயல் களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை விடுத்தனர்.

உரிய ஆவணங்களில்லாத வாகனங்கள் பறிமுதல்

மதுக்கரை அருகே போலீசார் மேற்கொண்ட திடீர்  சோதனையில், உரிய ஆவணங்களில்லாத நான்கு ஆட்டோக்கள் மற்றும் 47 இருசக்கர வாகனங்கள் பறிமு தல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம், மதுக்கரை அறிவொளி நகர்  பகுதியில் சட்டவிரோத செயல்பாடுகளை கண்காணிக் கும் வகையிலும், குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை கண்டறியும் வகையிலும் ஞாயிறன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. பேரூர் சரக துணை  காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில், சுமார் 70க்கும் மேற்பட்ட போலீசார் அறிவொளி நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதி யில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடி யிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார் ஆகிய வற்றின் ஆவணங்களை போலீசார் சோதனையிட்டனர். அதில் நான்கு பயணிகள் ஆட்டோக்கள் மற்றும் 47  இருசக்கர வாகனங்களுக்கு உரிய ஆவணங்களில் லாதது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங் களை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர் களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த வாகனங்கள் ஏதேனும் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித் தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அழைத்து வரப்பட்டாரா? இழுத்து வரப்பட்டாரா?

பாஜக தலைமையிலான கூட்டணிக்கு, எடப்பாடி பழனிச்சாமி அழைத்து வரபட்டடாரா? அல்லது இழுந்து  வரப்பட்டாரா? என சுப வீரபாண்டியன் கேள்வி எழுப்பி யுள்ளார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற் றும் திருச்செங்கோடு ஒன்றிய திமுக சார்பில், தேவனாங் குறிச்சியில் சனியன்று இந்தி திணிப்பு, நிதி பகிர்வு பார பட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் ஒன்றிய அர சைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு திமுக ஒன்றியச் செயலாளர் ஜி.தங்கவேல் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட திமுக பொறுப்பா ளர் கே.எஸ்.மூர்த்தி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத்  தலைவர் சுப வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட னர். அப்போது சுப வீரபாண்டியன் பேசுகையில், அதி முக - பாஜக கூட்டணி என்பது புதியது அல்ல; ஏற்கனவே  இருந்த பழைய கூட்டணி. பலமுறை முயன்று தோற்ற  கூட்டணி. பாஜக - அதிமுக கூட்டணி அறிவிப்பு நிகழ்வில்,  எடப்பாடி பழனிச்சாமி பேச அனுமதிக்கப்படவில்லை.  அவர் அழைத்து வரப்பட்டாரா? இழுத்து வரப்பட்டாரா? என்பதே கேள்வியாக உள்ளது. இந்தியாவின் உள்துறை அமைச்சராக, பாஜகவின் முக்கிய தலைவராக இருக் கிற அமித்ஷாவை, குருமூர்த்தி வந்து சந்திக்காமல், அவர் இருக்கிற இடத்திற்கு அமித்ஷா போவது என்பது  பாஜகவை இயக்குகிற இடத்தில் ஆர்எஸ்எஸ் இருக்கி றது என்பதை காட்டுகிறது. இக்கூட்டணியால் திமுக  கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அறிவாலயத் தின் செங்கலை உருவாமல் செல்ல மாட்டேன் என கூறிய  அண்ணாமலையை, பாஜக தலைவர் பதவியிலிருந்து உருவிவிட்டார்கள். எதைச் செய்ய வேண்டுமோ அதை  செய்வதில்லை; எதை செய்யக் கூடாதோ அதை செய் கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மதச்சார்பற்ற நாட்டில் பல்வேறு சமூகத்தினர் இணைந்து படிக்கிற கல்லூரி யில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் போட வைத்திருப் பது அவர் ஆர்எஸ்எஸ்சின் ஆள் என்பதை காட்டுகிறது,  என்றார்.