tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சோதனைச் சாவடிகளில் கணக்கில் வராத ரூ.2.13 லட்சம் பறிமுதல்

கோவை, மே 28- கே.ஜி.சாவடி மற்றும் கோபாலபுரம் ஆர்.டி.ஓ சோத னைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை யில் கணக்கில் வராத ரூ.2.13 லட்சம் பறிமுதல்  செய்யப்பட்டு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், உதவியாளர்களிடம் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஆர்.டி.ஓ சோதனைச் சாவடிகளில் புதனன்று காலை 5 முதல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீ சார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை –  கேரளம் எல்லையான கே.ஜி.சாவடி ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் உள்ள ஸ்டோர் ரூமில் இருந்த பிரிட்டர் பெட்டி யில் ரூ.1 லட்சம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும்  அங்கிருந்த மேஜைகளில் ரூ.17 ஆயிரம், மற்றும் மோட்டர் வாகன ஆய்வாளர் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள்  இல்லாததால் அதனை பறிமுதல் செய்த போலீசார், மோட்டார்  வாகன ஆய்வாளர் ஜெயசந்திரன், லோகநாதனிடம் விசா ரனை மேற்கொண்டனர். அதே போல பொள்ளாச்சி கேரளம்  எல்லையான கோபாலபுரம் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட போலீசார் பதிவு அறை மற் றும் மேஜையில் இருந்து ரூ.66 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து, மோட் டார் வாகன ஆய்வாளர் தமிழ்செல்வி, உதவியாளர் சிவகுரு விடம் விசாரணை மேற்கொண்டனர்.

பழுதடைந்த சாலைகளை சீரமைத்திடுக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை, மே 28- கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பழுதடைந்த சாலை களை சீரமைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா கொண்டம் பட்டி கிராமம் முதல் அரசம்பாளையம் வரை உள்ள கிராம  இணைப்பு சாலை பழுதடைந்துள்ளது. நடந்து செல்வ தற்கு கூட சிரமப்பட வேண்டியதாக உள்ளது. இதனால் வியா பாரிகள் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள் ளார்கள். உடனடியாக இங்கு தார் சாலை அமைத்து கொடுக்க  வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கிணத்துக்க டவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாயன்று மனு  அளித்தனர். இந்நிகழ்வில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி. ஆர். பழனிசாமி. ஒன்றியச் செயலாளர் சண் முகம், பொருளாளர் தங்கராஜ், மாதர் சங்க தாலுகா செயலா ளர் ரேவதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பழங்குடி கிராமத்தில் நிவாரணம் வழங்கல்

கோவை, மே 28- தாணிக்கண்டி பழங்குடி மலை கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்டு தன்னார்வ தொண்டு நிறு வனம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சாடிவ யல், வெள்ளிங்கிரி  சுற்றுவட்டார மலை கிராம பழங்குடி  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த நேர்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும்  திமுக சார்பில் பாதிக்கப்பட்ட மலைகிராம பழங்குடி மக்க ளுக்கு நிவாரணப் பொருட்கள் புதனன்று வழங்கப்பட்டது.  கோவை தாணிக்கண்டி பழங்குடி கிராமத்தில் உள்ள மக்க ளுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நேர்டு தன்னார்வ நிறுவனத்தின்  நிறுவனர் சௌ. காமராஜ் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் திமுக வடக்கு  மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு, மே 28- ஈரோடு மாவட்டத்தில் மாதாந்திர வேளாண் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளி யன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10 மணி  முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 12.30 வரை விவசாய  சங்க பிரதிநிதிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து கருத்து கள் தெரிவிக்கலாம். 1.30 வரை அலுவலர்கள் விளக்கம் அளிப் பர். எனவே, விவசாய பெருமக்கள் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.