பொய் சாட்சி சொல்ல வராததால் இருவர் கைது என்ஐஏ மீது இஸ்லாமிய இயக்கங்கள் குற்றச்சாட்டு
கோவை, ஜூன் 24- கோவை கார் குண்டு வெடிப்பு வழக் கில் பொய் சாட்சி சொல்ல வரவில்லை என்பதற்காகவே அரபி பாடசாலையை சேர்ந்த இருவரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய் திருப்பதாக அனைத்து ஜமாத் இஸ் லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சி களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டி னர். கோவை பத்திரிகையாளர் மன்றத் தில், கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய இயக்கங்கள், அரசி யல் கட்சி கூட்டமைப்பு சார்பாக செய்தி யாளர் சந்திப்பு செவ்வாயன்று நடை பெற்றது. கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் சுல்த்தான் அமீது பேட்டி யளித்தார். அப்போது தேசிய புல னாய்வு முகமை செயல்பாடுகளை அரசு களுக்கு தெரியபடுத்த வேண்டிய தேவை உள்ளது. தேசிய புலனாய்வு மையத்தின் செயல்பாடுகள் சந்தேகத் திற்கிடமான வகையில் இருக்கிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் களுக்கு எதிராக பொய் சாட்சியம் சொல்ல வராததால், இருவரை தற் போது தேசிய புலனாய்வு முகமையி னர் கைது செய்து இருக்கின்றனர். இவர்களுக்கு உதவி செய்பவர்கள் மிரட்டப்படுவதாகவும், அப்பட்டமான மனித உரிமை மீறலில் தேசிய புல னாய்வு முகமை ஈடுபடுகிறது. தேசிய புலனாய்வு அமைப்பின் செயல் பாடுகளை தமிழக அரசு கேள்வி கேட்க வேண்டும். அரபி பாடசாலைகள் தீவிரவாதி களை உருவாக்கும் மையமாக உள்ளதென செய்தி பரப்பப்படுகிறது. குண்டு வெடிப்பை நிகழ்த்திய முபின் அரபி பாடசாலையில் படித்தார் என்பதற் காக அங்கு படித்த அனைவருமே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள னர். இஸ்லாமிய மார்க்கத்தை, மொழியை, நன்னடத்தையை சொல்லிக் கொடுக்கக்கூடிய அரபிக் கல் லூரிகளை மையப்படுத்தி, பயங்கர வாதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படும் இடம் என முத்திரை குத்தப்படுகிறது, இதை கண்டிக்கிறோம். தீவிரவாத முத் திரை குத்தப்படுவதால் ஓரே நாளில் அவர்களின் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விடுகின்றது. காஷ்மீர் போல பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றாக அமர்ந்து பேட்டி அளிக்கும் நிலைக்கு இஸ்லாமிய பெண்களை தேசிய புல னாய்வு முகமை உருவாக்கியிருக்கி றது. இதை தமிழக அரசியல் கட்சிகள் பேச வேண்டும். இஸ்லாமியர்கள் அல் லாதவர்கள் வெடிமருந்து, துப்பாக்கி போன்றவற்றுடன் கைது செய்தாலும் அதை தேசிய புலனாய்வு முகமை விசா ரிப்பது இல்லை. இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முபின் ஏற்கனவே 2019 இல் இருந்து 2022 வரை தொடர்ச்சியாக என்ஐஏ கண் காணிப்பில் இருந்தவர்தான். என்ஐஏ அவர்களை முறையாக கண்காணிக்க தவறிவிட்டது. என்ஐஏ எதையும் புல னாய்வு செய்து கண்டுபிடிக்க வில்லை. அனைத்து தகவல்களையும் இஸ்லா மிய அமைப்புகள்தான் கொடுத்ததாக தெரிவித்த அவர்கள், 2019 முதல் என்ஐஏ கண்காணிப்பில் இருந்த முபின் எப்படி அவ்வளவு வெடிபொருட்களை சேர்க்க முடிந்தது. என்ஐஏ என்ன கண் காணிப்பு வேலை செய்தது. தல்கா என்பவரை தவிர இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேரும் என்ஐஏ வால் கண்காணிப்பில் இருந்தவர்கள்தான். இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல் வது தவறு என்றார். இதனைதொடர்த்து கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் அரபிபாட சாலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க தேசிய புலனாய்வு அமைப்பினரின் செயல் பாடுகள் குறித்து பேட்டியளித்தனர். 2.5 ஆண்டுகளுக்கு மேலாக விசா ரணைக்கு ஒத்துழைத்தும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் துன் புறுத்தும் விதமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.