ஆயத்த ஆடை தொழிலில் திருப்பூர் மாவட்டம் உலகத் தின் அடையாளம் என்றாலும்கூட, உழைக்கும் மக்கள் தொகையில் சுமார் 30 சதவிகிதம் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை வாழ்வாதாரமாகக் கொண் டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 472629 ஹெக்டரில் 184645 ஹெக்டேரை சாகுபடி பரப்பாகக் கொண் டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த, அதன் தொடர்புடைய தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக விவசாயத்துறையின் சவாலையும் திறமையாக எதிர்கொள்கிறது. ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவலாக்கல் தொழில் நுட்பங்களுடன், நீண்ட கால நிலை யான வேளாண்மை இயக்கம், மானவரி பகுதி மேம்பாடு, நில வேளாண்மை, கூட்டுப் பண்ணையம், விரிவான நீர்வடி நிலப்பகுதி வளர்ச்சி செயல்பாடுகள், ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை போன்ற தொழில் நுட்பங்கள் மூலம் விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பனியன் தொழில், விசைத்தறி, விவசா யம், கறிக்கோழி உற்பத்தின என திருப்பூர் மாவட்டத்தில் உழைக்கும் மக்கள் பெரும்பகுதி உழைப்பிலேயே உலகை உற்று நோக்க வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை என்றா லும், இந்த தொழில் மேம்பட உழைக்கும் கரங்கள் உழைப்பை செலுத்த தயாராக இருந்தபோதும், ஒன்றிய அரசின் கார்ப்ரேட் ஆதரவு கொள்கையால், விசைத்தறியும், பனியன் தொழி லும், விவசாயமும் விரக்தியின் விளிம்பில் நிற்கிறது. ஒன்று பட்ட திருப்பூர் மாவட்ட உழைக்கும் மக்கள் ஒன்றினைந்து, மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் எழுப்பி மீட்டுறுவாக்கம் செய்ய வேண்டும் என்பதே தற்போது முன் னிற்கும் சவாலாகும்.