tamilnadu

காலமெல்லாம் பாடுபட்டாலும் விடியாத விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வு

காலமெல்லாம் பாடுபட்டாலும் விடியாத விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வு

திருப்பூர், மே 6 – நாளொன்றுக்கு 10 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வேலை செய்து  10 முதல் 16 விசைத்தறிகளை ஓட்டக்கூ டிய தொழிலாளிகளுக்கு உழைப்புக்  கேற்ற குறைந்தபட்ச சம்பளம் கூட இல்லை. இவர்களுக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்க  வேண்டும் என்று சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள் ளது. இந்தியாவில் இரண்டாவது முக்கிய  விசைத்தறித் தொழில் மையமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், மங்கலம், பல்லடம், அவி நாசி வட்டாரத்தில் பல லட்சம் தறிகள்  இயங்கி வருகின்றன. இந்த வட்டாரத் தில் கிராமப்புற விவசாயிகளுக்கு, விவ சாயம் நலிவுற்ற நிலையில், விசைத் தறித் தொழில்தான் பக்க பலமாக, அவர் கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி யது. எனினும் கடந்த 30 ஆண்டுகளாக பலவித நெருக்கடிகளைச் சந்தித்து, சவாலான நிலையில்தான் இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் விசைத்தறி உரிமையாளர்கள் போராடி வருகின் றனர். குறிப்பாக முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு சென் வாட் வரி விதிப்பு என சுமையைச் சுமத்தி யது.

அதற்கெதிராக மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. வாஜ்பாய் அரசு தோற்கடிக்கப்பட்டு, ஐக்கிய முற் போக்குக்.கூட்டணி அரசு வந்த நிலை யில்தான் சென்வாட் வரி விதிப்பு ரத்து  செய்யப்பட்டது. ஒன்றிய அரசு கோவை மண்டல  விசைத்தறி தொழில் மையத்தை ஊக்கு விப்பதற்கு என்று சில திட்டங்களை அறி வித்தது. எனினும் அவை நூற்றுக்கணக் கான விசைத்தறிகளை வைத்தி ருக்கக்கூடிய பெரிய விசைத்தறி உரி மையாளர்களுக்கே சாதகமாக இருந் தது. சாதா தறி எனப்படும் விசைத்த றிகளை கொண்டு இயக்கக்கூடிய விசைத்தறியாளர்களுக்கு அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் பயன ளிக்கவில்லை. மாறாக, நவீனமயம் என  கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில்  தானியங்கி ஆட்டோ தறிகளை அமைத் தவர்கள் அதிகளவில் துணி உற்பத்தி செய்ததுடன், உற்பத்திச் செலவு குறைந்த நிலையில், சந்தையில் மலிவு  விலையில் போட்டியிடக்கூடிய சாதக மான வாய்ப்பைப் பெற்றனர்.

ஆனால் 90  சதவிகிதமான சாதா தறி உரிமையாளர் கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு  நூல் பெற்று கூலிக்கு நெசவு செய்து தரக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். இதனால் இயல்பாகவே அதிக முத லீட்டில், நவீன விசைத்தறியாளர்களு டன் இவர்கள் போட்டியிட முடிய வில்லை. அத்துடன் கடந்த 10 ஆண்டுக ளுக்கு மேலான பாஜக ஆட்சியின் ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, சந்தை நெருக் கடி போன்ற காரணங்களாலும், விசைத் தறிகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி யதாலும் இவர்கள் நெருக்கடிக்குள் தள் ளப்பட்டனர். இதனால் பல ஆயிரம் விசைத்தறியாளர்கள் இந்த தொழிலை  விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் பழைய சாமான்கள் என உடைத்து விற்கப்படும் அவல நிலை ஏற்பட்டது. இந்த வட்டாரத்தின் விசைத்தறி தொழிலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத் தில் பெரிய ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் அலட்சியமாக செயல்பட்டனர். ஏற்கெ னவே சில ஆண்டுகளுக்கு முன்பு நிறை வேற்றிய ஒப்பந்தத்தைக் கூட அமல்ப டுத்தாமல் கூலியைக் குறைத்தனர்.

தற் போது ஒரு மாத காலம் நீண்ட போராட் டத்தை நடத்தி புதிய கூலி உயர்வு ஒப் பந்தம் நிறைவேற்றியுள்ளனர். ஒட்டுமொத்த விசைத்தறித் தொழில்  நிலைமை, ஆட்சியாளர்களின் கொள் கைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்க ளின் பாராமுகம் காரணமாக நெருக்கடி  நிலைக்குள் இருக்கிறது. ஆனால் அதை  விட மோசமானதாக இந்த தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை படுபாதாளத்தில் இருக்கிறது. நெருக்கடியின் சுமையை அடுத்த டுத்து கீழே இருப்பவர்களுக்கு கடத்து வது என்பதற்கேற்ப, ஜவுளி உற்பத்தி யாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு கூலி தர மறுக்கின்றனர். விசைத்தறியா ளர்கள் விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு சம்பள உயர்வு தருவதைப் பற்றி  மௌனம் காக்கின்றனர் என்பதே இப் போதைய நிலை. விசைத்தறித் தொழிலைப் பொறுத் தவரை மிகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள் பட்டியல் சாதிக ளைச் சேர்ந்தவர்களாக மிக வறிய  நிலையில் இருக்கின்றனர். இத்துடன்  பிற மாவட்டங்களில் இருந்தும், புலம் பெயர்ந்து வந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்தான் வேலை செய் கின்றனர்.  

24 மணி நேரமும் இயக்கப்படும் விசைத்தறிகளில் காலை ஷிப்ட் 10 மணி  நேரம், இரவு ஷிப்ட் 14 மணி நேரம் என  வேலை செய்கின்றனர். ஆரம்பத்தில் அதிகபட்சம் 4 தறிகளை மட்டுமே தொழி லாளர்கள் இயக்கினர். ஆனால் கடந்த 30, 40 ஆண்டுகளில் ஒவ்வொரு தொழி லாளியும் குறைந்தபட்சம் 10 முதல் அதி கபட்சம் 16 தறிகள் வரை இயக்கும்  நிலைக்கு கடுமையாக உழைக்கின்ற னர். அதாவது கடந்த காலத்தில் 4 தறி களை இயக்கி அதில் கிடைத்த ஊதி யத்தைக் கொண்டு வாழ முடிந்த தொழி லாளர்கள், தற்போது 16 தறிகளை இயக் கினாலும் போதிய ஊதியம் கிடைப்ப தில்லை என்ற கொடிய சுரண்டல் நிலை தான் உள்ளது. சொற்ப ஊதியம், கடுமை யான வேலை என்ற நிலை காரணமா கவே புதிய தொழிலாளர்கள் வருவ தில்லை. ஒரு விசைத்தறி தொழிலாளி நாளொன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400  வரை சம்பளம் பெறுவார். வாரச்சம்ப ளம் பெறக்கூடிய தொழிலாளிகள் ஒரு  மாதம் பெறக்கூடிய ஊதியம் சராசரி யாக 12 ஆயிரம். அதிகபட்சம் ரூ.15 ஆயி ரம்தான் கிடைக்கும்.

மிகவும் வறிய நிலையில் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் இரண்டு குழுக்கடன் (மைக்ரோ பைனான்ஸ்) பெற்று நிரந் தரக் கடனாளியாக இருப்பர். இது தவிர  லீவுத் தறி ஓட்டுபவர்கள் என சற்று கூடு தல் சம்பளம் பெறுவர். அவர்களுக்கும்  கூட எந்த சட்ட உரிமையும் கிடை யாது. நீண்ட காலமாக சட்ட உரிமையும் இல்லாமல், குறைந்தபட்ச நியாயமான  ஊதியமும் இல்லாமல், விசைத்தறித்  தொழிலாளர்கள் வாழ்வு அவலமான தாக உள்ளது. இவர்கள் உழைப்பில் தான் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை இல்லை. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது  போல் ஒப்பந்தங்கள் நிறைவேற்றும் போது அடுத்து உடனடியாக தொழிலா ளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம்  நிறைவேற்றப்படும். ஆனால் இம்முறை  ஒப்பந்தம் நிறைவேற்றி ஏறத்தாழ ஒரு  மாதம் ஆகியும் விசைத்தறி உரிமையா ளர்கள், இது பற்றி அமைதி காக்கின்ற னர். தொழிலாளர்கள் இல்லாமல் விசைத்தறித் தொழில் என்பது இல்லை.  அவர்கள் வாழ்வு நலிவடையும்போது, விசைத்தறி தொழில் சிறப்பாக செயல் பட முடியாது. எனவே விசைத்தறித் தொழிலாளர்களுக்கு தற்போதைய விலைவாசி உயர்வு, வாழ்க்கை நெருக் கடிச் சூழலுக்கு ஏற்ப புதிய சம்பள  உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற முன்வர வேண்டும் என சிஐடியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங் கப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி  தொழிலாளர் துறை உதவி ஆணைய ருக்குக் கடிதம் எழுதியுள்ளார். சட்டப்படி 8 மணி நேர வேலை, சட்ட  சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை நடை முறைப்படுத்தவும், குறைந்தபட்ச மாத  ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கவும் தொழிலாளர் துறை உரிய தலையீடு  செய்து விசைத்தறி உரிமையாளர் களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.முத்துசாமி கேட்டுக் கொண்டுள்ளார். தொழில் வளர்ச்சியின் உண்மையான அர்த்தம் அதில் பாடுபடும் தொழிலாளர்களின் வாழ்வில் நல்ல மாற்றம் காண்பதே. காலமெல்லாம் பாடுபட்டும் விடியாத விசைத்தறி தொழிலாளர் வாழ்வு மலர  அவர்கள் ஒன்றுபட வேண்டும்.